ஆர்ஜெண்டினாவில் ஊதிய உயர்வு கோரி, பல்லாயிரக்கணக்கான அரசு தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்
May 25 2016 8:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆர்ஜெண்டினாவில் ஊதிய உயர்வு கோரி, பல்லாயிரக்கணக்கான அரசு தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
ஆர்ஜெண்டினா தலைநகர் Buenos Aires-ல் ஊதிய உயர்வு கோரி, தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பச்சைநிற சீருடையணிந்து இசைக்கருவிகளை இசைத்தவாறு சென்றனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் அந்நாட்டு அதிபருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடிச் சென்றனர். மேலும் 24 மணி நேர வேலை நிறுத்தப்போராட்டத்திற்கும் தொழிலாளர்கள் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. இதனால் அரசு நிர்வாகம் முற்றிலும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.