துருக்கி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாவத்தின்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு
May 3 2016 6:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாவத்தின்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் தாக்கி கொள்ளும் சம்பவம் அரங்கேறுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த ஆண்டு தொடங்கிய கூட்டத்தொடரின் போது நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். சிரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வருபவர்களுக்கு அடைக்கலம் தருவதற்கு ஐரோப்பிய யூனியனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.