அமெரிக்காவில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் தொழிலாளர்கள் மீது போலீசார் தாக்குதல் : வன்முறை வெடித்ததால் இரு போலீசாரும், 10க்கும் மேற்பட்ட ஊர்வலத்தினரும் படுகாயம்
May 2 2016 9:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில், தொழிலாளர்கள் மீது போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, வன்முறை வெடித்தது. இதில் இரு போலீசாரும், 10க்கும் மேற்பட்ட ஊர்வலத்தினரும் படுகாயமடைந்தனர்.
வாஷிங்டனில் உள்ள Seattle பகுதியில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் பங்கேற்ற தொழிலாளர்கள், மே தின முழக்கங்கள் எழுப்பியதோடு, அப்பகுதியில் தொழிலாளர்களுக்கு எதிராக போலீசார் தொடர்ந்து நடத்தி வரும் வன்முறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஊர்வலத்தினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர். இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள், போலீசாரை நோக்கி கற்களையும், பாட்டில்களை வீசினர். இதனையடுத்து, போலீசார் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. இதனையடுத்து தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்ததோடு, அப்பகுதியில் குடியுரிமை இல்லாமல் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அப்புறப்படுத்துமாறு மாநகர மேயருக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.