அமெரிக்காவில் 11 சர்க்கஸ் யானைகளுக்கு ஓய்வு - பாதுகாப்பு மையத்திற்கு அனுப்ப ஏற்பாடு
May 1 2016 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் சர்க்கஸ் நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களை நீண்டகாலமாக உற்சாகப்படுத்தி வந்த 11 யானைகள் ஓய்வு பெற்று, யானைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அமெரிக்காவில் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனம் ஒன்று, பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு விலங்குகளை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, யானைகளின் சாகசங்கள் குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இந்நிறுவனம் நடத்தி வரும் நிகழ்ச்சிகளில் நீண்டகாலமாக பங்கேற்று வந்த 11 யானைகளுக்கு தற்போது ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே தினத்தையொட்டி "The Greatest Show on Earth" என்ற நிகழ்ச்சியில் இந்த யானைகள் கடைசியாக கலந்துகொண்டு நடத்திய சாகசங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள இந்த 11 யானைகளும், Florida-வில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இயற்கைச்சூழல் நிறைந்த அம்மையத்தில் ஏற்கெனவே பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.