அமெரிக்க உயிரியல் பூங்காவில் உருவாக்கப்பட்ட செயற்கை பனிப்பொழிவு - சிறுத்தைகளை மகிழ்விக்க விநோத நடவடிக்கை
Apr 29 2016 10:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ உயிரியல் பூங்காவில் சிறுத்தை புலிகளை மகிழ்விக்க செயற்கையான பனிப்பொழிவு உருவாக்கப்பட்டது. இதனை அந்த விலங்கினங்கள் உற்சாகமாக அனுபவித்து மகிழ்ந்தன.
இந்த சாண்டியாகோ உயிரியல் பூங்கா, அமெரிக்காவின் முக்கிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். அரிய பலவகை உயிரினங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. அவற்றுள் ஜாகுவார் வகையைச் சேர்ந்த சிsறுத்தை இனமும் குறிப்பிடத்தக்கதாகும். நிந்திரி என்ற தாய் சிறுத்தையும், வேலரியோ என்ற அதன் ஒரு வயது குட்டி சிறுத்தையும் அங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இவற்றை மகிழ்விக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு விநோத முயற்சியில் ஈடுபட்டது. காலையில் இவை இரண்டும் கண்விழிக்கும்பாது பனிப்பொழிவை காணும் வகையில் அவற்றின் கூண்டுப் பகுதியில் செயற்கையான பனிப்பொழிவு உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப இந்த புதிய சூழலைக் கண்ட சிறுத்தைகள் இந்தப் பனிப்பொழிவை வெகுவாக அனுபவித்தன. அவற்றுக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. விலங்குகளுக்கு இதுபோன்ற பனிப்பொழிவு அனுபவத்தை அளித்தது இதுவே முதல்முறை என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.