அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு போர் ரக விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் : அதிபர் ஒபாமாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
Apr 29 2016 5:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானுக்கு போர் ரக விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமென, அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளனர்.
அதிபர் ஒபாமாவின் கட்டுபாட்டின் கீழ் அந்நாட்டு ராணுவ தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஆசிய, பசிபிக் பிரிவுக்கான துணைக்குழுக்கூட்டம் நடைபெற்றது. பெண்டகனில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் எப்- 16 ரக போர் விமானங்களை, பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய அன்மையில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா ராணுவத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டுமென, அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளனர். போர் ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யப்பட்டால், இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எனவும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.