பிரபஞ்சத்தின் வளிமண்டலத்தில் உள்ள கரும் துளையிலிருந்து எழும் ஈர்ப்புவிசையின் அலைகளை கண்டறிந்து அமெரிக்க விஞ்ஞானி சாதனை
Feb 12 2016 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விண்வெளியில் சக்திவாய்ந்த இரு கருந்துளைகள் சந்தித்துக் கொள்ளும்போது, அவற்றுக்கிடையே காந்த ஈர்ப்பு அலைகள் தோன்றுகின்றன என்னும் ஆல்ஃபிரட் ஐன்ஸ்டீனின் கருத்து நிரூபிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தியின் ஆற்றலைக் கண்டறிந்த விஞ்ஞானி ஆல்ஃபிரட் ஐன்ஸ்டீன், வெகு காலம் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த இரு கருந்துளைகள் சந்தித்துக் கொள்ளும்போது, அவற்றுக்கிடையே காந்த ஈர்ப்பு அலைகள் தோன்றுகின்றன என்று யூகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்தார். அதுகுறித்து, விஞ்ஞானிகளிடையே அவ்வப்போது விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள லூசியானா மற்றும் வாஷிங்டனையொட்டிய பகுதிகளில் இதுகுறித்த ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டது. சூரியனை விட 29 மடங்கு சக்தி வாய்ந்த ஒரு கோளும், 36 மடங்கு சக்தி வாய்ந்த மற்றொரு கோளும், சுமார் 130 கோடி ஆண்டுகள் செயல்திறன் மிக்கதாக இருந்த பின் கருந்துளைகளாக மாறியிருந்த நிலையில், ஆய்வு நடத்தப்பட்டபோது, அவற்றினிடையே காந்த ஈர்ப்பு அலைகள் தோன்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
28 மணி நேரம் நீடித்த இந்த ஆய்வின் முடிவில், 100 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், வானவியலில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்றும் திரு. டேவிட் ரீட்ஸ் தெரிவித்தார்.