மெக்ஸிகோவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 52 கைதிகள் உயிரிழப்பு

Feb 12 2016 8:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்ஸிகோவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 52 கைதிகள் உயிரிழந்தனர் மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் உள்ள Monterrey நகரில் உள்ள சிறைச்சாலையில், இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல், திடீரென கலவரமாக வெடித்தது. கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு கைதிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதுடன், சிறைகளுக்கும் தீ வைத்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீஸ் அதிகாரிகளும் தாக்குதலுக்கு உள்ளாகினர். சுமார் 40 நிமிடம் நீடித்த இந்த மோதலில், 52 கைதிகள் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் குறித்து அறிந்த கைதிகளின் உறவினர்கள் ஏராளமானோர் சிறைச்சாலை வெளியே திரண்டு, அங்குள்ள நிலவரத்தை தங்களிடம் தெரிவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறைச்சாலை கதவை திறந்து உள்ளே நுழைய முயன்ற உறவினர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். ஆத்திரமடைந்த உறவினர்களில் சிலர், கையிலிருந்த பொருட்களைக் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00