கவுதமாலாவில் சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் பலி : ராணுவத்தினரும், போலீசாரும் விரைவாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
Dec 1 2015 10:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கவுதமாலாவில் சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் உயிரிழந்ததையடுத்து ராணுவத்தினரும், போலீசாரும் விரைவாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கவுதமாலா சிறைச்சாலையில் 600 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்ற நிலையில், தற்போது 3,092 கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அங்கு நேற்று ஏற்பட்ட வன்முறையில், ஒருவரை ஒருவர் பயங்கரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த மோதலில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, ராணுவத்தினரும், போலீசாரும் விரைவாக செயல்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.