சீனாவில் குளிர் காலம் தொடங்கியதையடுத்து, பொன்னிற இலைகளை உதிர்க்கும் கிங்கோ மரம் - மஞ்சள் வண்ண காடாக மாறிய காட்சியை காண பார்வையாளர்கள் ஆர்வம்
Nov 28 2015 8:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் குளிர் காலம் தொடங்கியுள்ளதையடுத்து ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான கிங்கோ மரத்தில் இருந்து பொன்னிற இலைகள் உதிர தொடங்கியுள்ளன.
சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த மடாலயத்தில் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான கிங்கோ மரம் அமைந்துள்ளது. சீனாவில் குளிர்காலம் தொடங்கியதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தனது பொன்னிற இலைகளை உதிர்க்க தொடங்கியுள்ளது. இக்காட்சி காண்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது. சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இந்த மரத்தின் இனம் மாறாமல், அழியாமல் இருந்துவருவதால், இவை வாழும் படிமங்கள் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். சீனர்களால் மெய்டென்ஹேர் என அறியப்படும் இந்த மரங்களை, பார்வையிட இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.