அமெரிக்காவில் மருத்துவமனையில் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலி, 9 பேர் படுகாயம் - மர்ம நபர் கைது
Nov 28 2015 8:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலியானார்கள். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் Colorado மாகாணத்தில் மருத்துவமனைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது சரமாறியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், காவல்துறையினர் உட்பட 9 பேர் பலத்த காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.