சீனா நிலக்கரி சுரங்க தீவிபத்து - 21 பேர் பலி, ஒருவர் மாயம்
Nov 21 2015 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 21 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள Xinghua சுரங்கத்தில் நேற்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சுரங்கத்தில் 38 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்துவந்த மீட்புக்குழுவினர். பலியான 21 பணியாளர்களின் உடல்களை மீட்டனர். 16 தொழிலாளர்களை உயிருடன் மீட்டனர். மேலும் தீ பரவாமல் இருக்க தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் காணாமல் போன தொழிலாளர் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.