ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வலியுறுத்தும் தீர்மானம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றம்
Nov 21 2015 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் நடவடிக்கைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் அண்மைக்காலமாக பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகள், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது என்றும் வலியுறுத்தியுள்ள இந்த தீர்மானத்தில், தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது.