பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் நிகழ்ந்த இருவேறு தாக்குதல் சம்பவங்களில், 5 பேர் பலி - 8 பேர் காயம்
Nov 21 2015 6:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் நிகழ்ந்த இருவேறு தாக்குதல் சம்பவங்களில், 5 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில், 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில், பாலஸ்தீனர் ஒருவர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில், 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயம் அடைந்தார். இச்சம்பவங்களால், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.