பால்வெளிக்கு அப்பால் 39 ஒளி ஆண்டு தூரத்தில் பூமிக்கு சமமான பரப்பளவு கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
Nov 19 2015 8:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பால்வெளிக்கு அப்பால் 39 ஒளி ஆண்டு தூரத்தில் பூமிக்கு சமமான பரப்பளவு கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். பால்வெளி மண்டலத்திற்கு அப்பால், 39 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள இந்த கிரகம், பரப்பளவில் பூமியைப் போன்று இருப்பதாகவும், பார்வைக்கு வெள்ளி கிரகத்தைப் போன்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கிரகம் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா விண்வெளி மையம் அனுப்பிய ரோவர் விண்கலம், அங்கு குன்றுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், கோடிக்கணக்கான ஆண்டுகளாக செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாறுதல்கள் தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.