ஏமனில், திருமண வீட்டின் மீது சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 15 பேர் பலி
Oct 9 2015 8:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏமனில், திருமண வீட்டின் மீது சவுதி கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமன் நாட்டில் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வந்த போராட்டம் தீவிரமடைந்து உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் சனாவிலிருந்து 113 கிலோ மீட்டர் தொலைவில், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள சன்பன் நகரில் திருமண வீட்டின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான திருமண வீடு, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான தலைவர் ஒருவருக்கு சொந்தமான வீடு என கூறப்படுகிறது.