பிலிப்பைன்ஸில் அந்நாட்டு கடற்படை, அமெரிக்க கடற்படையுடன் கூட்டு சேர்ந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டது
Oct 9 2015 8:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்கா நடந்த 2014 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் பாதுகாப்பு ஒத்திகையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்படையினர் கூட்டாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். ஃபிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் இந்த ஒத்திகை நடைபெற்றது. சீனா தனது கடல் எல்லையை விரிவுபடுத்தும் முயற்சியாக அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை என்ற பெயரில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு ஆசிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடிக் கொடுக்கவே இந்த அமெரிக்கா-ஃபிலிப்பைன்ஸ் இணைந்த கூட்டுப் போர்ப் பயிற்சி நடத்தப்பட்டது. கடற்கரையோர பகுதிகளில் கூடாரம் அமைத்தும், அதிநவீன ஆயுதங்களுடன் படகில் சென்றும், தாக்குதல் நடத்துவது போன்ற போர்ப் பயிற்சிகள் தத்ரூபமாக அமைந்திருந்தன.