இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவியை அந்நாடு கோரியுள்ளது
Oct 9 2015 8:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவியை அந்நாடு கோரியுள்ளது.
இந்தோனேஷியாவில் மேற்கு Kalimantan மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. இத்தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். எனினும், காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த தீயை கட்டுப்படுத்த, ஒரே நேரத்தில் 15 டன் தண்ணீரை ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கவேண்டும். ஆனால், 3 டன் தண்ணீர் மட்டுமே தெளிக்கப்படுவதால், தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்தடுத்த பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவி வருவதால், நகருக்குள்ளும் தீ பரவி, பேரழிவை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, தீயை அணைக்க, சிங்கப்பூர், ரஷ்யா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை இந்தோனேஷியா கோரியுள்ளது.