இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் Svetlana Alexievich-க்கு வழங்கப்படுகிறது
Oct 8 2015 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த Svetlana Alexievich என்ற பெண் எழுத்தாளருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களுக்கு, ஸ்வீடன் தலைநகர் Stockholm நகரில், ஆண்டுதோறும் Nobel பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2015-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 67 வயதான Svetlana Alexievich என்ற எழுத்தாளருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் துயரங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான துணிச்சல்களை பற்றி பல கோணங்களில் எழுதியுள்ள Svetlana-வுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு நாளையும், வரும் 12-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்றும் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.