நோபல் பரிசு பெறுபவர்களில், அதிகமானோர் பிரிட்டனில் உயர்கல்வி படித்தவர்கள் : பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு நடத்திய ஆய்வில் தகவல்
Oct 7 2015 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நோபல் பரிசு பெறுபவர்களில், அதிகமானோர் பிரிட்டனில் உயர்கல்வி படித்தவர்கள் என பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை 860 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து, பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில், நோபல் பரிசு பெற்றவர்களில் 131 பேர் தங்கள் கல்வியின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதிலும், 38 சதவீதத்தினர் பிரிட்டனின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களான ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்றவற்றில் உயர்கல்வி படித்துள்ளனர். இவ்வரிசையில் 2-வது மற்றும் 3-வது இடங்களை அமெரிக்கா மற்றும் ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் பிடித்துள்ளன.
பிரிட்டனில் படித்து, மருத்துவத்துறையில் 17 பேரும், இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் 8 பேரும், பொருளாதாரத்தில் 7 பேரும், அமைதி மற்றும் இலக்கியத்திற்கு தலா 5 பேரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.