தர்மசாலாவில் நடைபெற்ற "மிஸ் இமாலயா" அழகிப் போட்டி : உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தேர்வு
Oct 7 2015 7:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இமயமலைப் பகுதியையொட்டிய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக "மிஸ் இமாலயா" என்ற அழகிப் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது.
தர்மசாலாவில் நடைபெற்ற மிஸ் இமாலாய அழகிப் போட்டியில், இமயமலைப் பகுதியை சுற்றியுள்ள மாநிலங்களான ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். இமய மலைப் பகுதியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் உடை அணிந்திருந்தனர்.
பல்வேறு சுற்றாக நடைபெற்ற இப்போட்டியில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த Tanshuman Gurung என்ற 23 வயது பெண் மிஸ் இமாலாயவாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த அழகிப் போட்டியில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த Tenzin Sangnyin 2-வது இடத்தையும், அருணாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த Chum Darang 3-வது இடத்தையும் பிடித்தனர். இமயமலைப் பகுதியின் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மிஸ் இமாலாயா அழகிப் போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.