காட்லாந்தில் பிரிட்டன் அரசு ரகசியமாக 5,100 கோடி ரூபாய் செலவில் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் தயாரித்து வருவது அம்பலம் : சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
Aug 31 2015 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டன் அரசு 5,100 கோடி ரூபாய் செலவில், ஸ்காட்லாந்தில் ரகசியமாக அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் தயாரித்து வருவது அம்பலமாகியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அணுஆயுதங்களுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு நிலவும் நிலையில், பிரிட்டன், ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள Faslane கப்பல் தளத்தில் ரகசியமாக அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் தயாரித்து வருவதை பிரிட்டிஷ் புலனாய்வு பத்திரிகைகள் கண்டறிந்து வெளியிட்டுள்ளன. அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பிரிட்டிஷ் நிதியமைச்சர் ஜார்ஜ் ஒஸ்போன், நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக, பழைய நீர்மூழ்கிக் கப்பலை புனரமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.