கனடா துறைமுகம் அருகே சரக்கு படகு கவிழ்ந்து விபத்து - ஆயிரக்கணக்கான பழுதடைந்த கார்கள் தண்ணீரில் மூழ்கியதால், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் என அச்சம்
Aug 31 2015 8:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடா நாட்டில் கைவிடப்பட்ட கார்களை உலோக மறுசுழற்சிக்காக கொண்டுசென்ற பெரிய படகு, துறைமுகப் பகுதியில் மூழ்க தொடங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
கனடா நாட்டில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட கார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கார்களை நொறுக்கி உலோக மறுசுழற்சிக்காக பெரிய படகு மூலம் தனியார் நிறுவனம் ஒன்று கொண்டு சென்றது. ஆயிரக்கணக்கான நொறுங்கிய கார்களை ஏற்றிச் சென்ற இந்தப் படகு, விக்டோரியா துறைமுகப் பகுதியில் மூழ்க தொடங்கியுள்ளது. படகில் உள்ள கார்களை அப்புறுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், நொறுங்கிய கார்களுடன் படகு மூழ்கும்பட்சத்தில், அப்பகுதியின் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என அஞ்சப்படுகிறது.