மலேசியாவில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி தொடர்ந்து நடைபெறும் பேரணி - ஆயிரக்கணக்கான மக்கள் விடியவிடிய சாலைகளை மறித்து போராட்டம்
Aug 31 2015 8:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசிய பிரதமர் கோடி கணக்கில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அவர் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தலைமையிலான அரசு ஊழலில் திளைத்து வருவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கோலாலம்பூரில் சுதந்திர சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு தொடங்கிய இந்தப் போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. காலையில் வழக்கம்போல தேவாலயங்களில் பிரார்த்தனை செய்துவிட்டு, உடற்பயிற்சிகளை செய்த பின்னர், பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். பிரதமர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.