அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் தொடர்வதாக புகார் - மின்னெசோடா மாகாணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

Aug 31 2015 8:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் Minnesota மாகாணத்தில் நடைபெற்ற அரசுக் கண்காட்சி முன்பு, ஆயிரக்கணக்கான கருப்பின மக்கள் திரண்டு, தங்களுக்கான வாழ்வுரிமைச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் அண்மைக்காலமாக கருப்பின மக்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்துறையினரின் ஒடுக்குமுறை தலைதூக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு மிசவுரி நகரில் நடந்து சென்று கொண்டிருந்த கருப்பின இளைஞர் ஒருவரை வெள்ளையின போலீஸ் அதிகாரி, இனவெறி காரணமாக சுட்டுக் கொன்றார். அவர் குற்றமற்றவர் என வெள்ளையின நீதிபதி ஒருவர் விடுதலை செய்தார். இவற்றை, சுட்டிக்காட்டி கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கா முழுவதும் கருப்பின மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, Minnesota மாகாணத்தில் நேற்று தொடங்கப்பட்ட அரசுக் கண்காட்சி முன்பு, ஆயிரக்கணக்கான கருப்பின மக்கள் திரண்டு, தங்களுக்கான வாழ்வுரிமைச் சட்டத்தை நிறைவேற்றக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 12 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியைக் காண வரும் சுமார் 20 லட்சம் மக்களுக்கும் தங்களது உரிமைப் பிரச்னையை உணர்த்தும் வகையில், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00