ஈராக்கில், ஊழலுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்
Aug 29 2015 8:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக்கில் ஊழலுக்கு எதிராகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரியும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பெண்கள், இளைஞர்கள் உட்பட இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஈராக்கின் தேசியக் கொடியை ஏந்தியபடி, தேசிய கீதத்தை இசைத்தவாறு பேரணியில் ஈடுபட்டவர்கள் பேரணியாகச் சென்றனர். ஈராக் அரசியலில் அமெரிக்கா தலையிடுவதற்கு எதிராகச் செயல்படும் பல அமைப்புக்களும் இப்போராட்டதில் பங்கேற்றன.