அமெரிக்காவுடன் இணைந்து பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டது தென்கொரியா
Aug 29 2015 8:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி, அமெரிக்க படையுடன் இணைந்து தென்கொரிய வீரர்கள் பிரமாண்ட ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டனர்.
வடகொரியாவின் எச்சரிக்கையும் மீறி, அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா தொடர்ந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இருநாட்டுக்கும் பகைமை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தென்கொரியாவின் POCHEON பகுதியில், அமெரிக்க வீரர்களுடன் இணைந்து, தென்கொரியா மிகப் பெரிய ராணுவ ஒத்திகை நடத்தியது. 120 பீரங்கிகள், 45 ஹெலிகாப்டர்கள், 42 போர் விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன போர் தளவாடங்களுடன், 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்று, இந்த பிரமாண்ட ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு முன்பு வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டநிலையில், தென்கொரியாவின் இந்த கூட்டு ராணுவ பயிற்சி, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.