ஆஸ்திரியா - ஹங்கேரி எல்லைப்பகுதியில் அனாதையாக நின்றிருந்த லாரிக்குள் இருந்து 50 சடலங்கள் : போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை
Aug 29 2015 8:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரியா - ஹங்கேரி நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றிருந்த ஒரு லாரிக்குள் இருந்து 50 சடலங்களை ஆஸ்திரியா நாட்டு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
ஆஸ்திரியா - ஹங்கேரி நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமையில் இருந்து ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த லாரியின் மூடிய கதவை உடைத்து திறந்துப் பார்த்தபோது உள்ளே இருந்து சுமார் 50 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிகிறது. கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திச் செல்லும் முயற்சியில், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க இந்த லாரியை கைவிட்டு தப்பிச்சென்ற உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் ஆஸ்திரியாவின் வரலாற்றின் இருண்ட தினம் என்றும் இந்த சோகம் தங்களை வெகு ஆழமாக பாதித்துள்ளது என்று ஆஸ்திரியா நாட்டின் உள்துறை அமைச்சர் ஜோஹானா மைக்ல்-லிய்ட்னெர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருபவர்களைப் பற்றி நடைபெற்று வரும் பல்கானஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஜெர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல் குறிப்பிட்டுள்ளார்.