மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் ஆஸ்திரிய நாட்டில் கொத்துக்கொத்தாக பலியான அகதிகள் - உலக நாடுகள் அதிர்ச்சி - முடிவுக்கு கொண்டவர ஐ.நா. வேண்டுகோள்
Aug 29 2015 8:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய தரைக்கடல் பகுதியில் சிசிலி தீவு அருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் சென்ற அகதிகள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆஸ்திரியா நாட்டு நெடுஞ்சாலையில் லாரி ஒன்றில் 70 அகதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வறுமை, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெறுவது என்பது அவ்வப்போது நிகழ்கின்றது. குறிப்பாக, மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து உயிரை பணயம் வைத்து ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் சிசிலி தீவு அருகே சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் அகதிகளாக சென்ற 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அண்மையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, லிபியா அருகே படகு விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் பலியாகினர். இந்த 2 நிகழ்வுகளால் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரியா நாட்டின் தேசிய நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்த கண்டெய்னர் லாரி ஒன்றில் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் அகதிகள் என தெரியவந்துள்ள நிலையில், இந்த நிகழ்வு உலக நாடுகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடல்களை மீட்டு அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, இடம்பெயர்ந்து செல்வோரின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார். இதனை சரிசெய்ய கூட்டு நடவடிக்கை தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.