பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டத்தின் அளவு 3 அடி உயரும் - நாசா தகவல்

Aug 29 2015 8:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என நாசா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு, கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது. கிரீன்லாந்து மற்றும் அண்டார்ட்டிக்கா பகுதியில் பனிப்பாறைகள் உருகியதால் கடந்த 1992 ஆம் ஆண்டு கடல்மட்ட அளவு, 3 அங்குலமாக உயர்ந்துள்ளது. உலகம் தோன்றிய நாள் முதல், இன்று வரையிலான கடல் மட்ட உயர்வு அளவுகளைப் பார்க்கும்போது, இப்போதிருக்கும் வேகத்திலேயே பனிப் பாறைகள் உருகினால், நிச்சயமாக இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளில் உலகளாவிய கடல் மட்டத்தின் அளவு சுமார் 10 அடி உயரும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்தின் உயர்வைத் தடுக்க முடியாது என்றும், ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00