சீன உயிரியல் பூங்காவில் புலிக்குட்டிகளுக்கு நேசத்துடனும், பாசத்துடனும் பாலூட்டும் நாய் : ஊழியர்கள் இணையதளம் வாயிலாக பதிவேற்றம்
Aug 29 2015 7:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன உயிரியல் பூங்காவில் புலிக்குட்டிகள் நாய்ப்பால் குடித்து வளர்ந்து வருகின்றன. தங்களுக்குள் எந்த பிரிவினைகளும் இல்லை என்பதற்கு இந்த விலங்குகள் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் வளர்ந்துவரும் ஒரு நாயும் சைபீரிய இனத்தைச் சேர்ந்த மூன்று புலிக்குட்டிகளும் இதனை நிரூபித்துள்ளன. வடகிழக்கு சீனாவில் உள்ள ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு சைபீரிய இனப் புலி மூன்று குட்டிகளை அடுத்தடுத்து ஈன்றது. சொந்த குட்டிகளுக்கு பாலூட்ட மறுத்த தாய்ப்புலி முறைப்பு காட்டிவந்த நிலையில், இந்த அரியவகை புலிக்குட்டிகளின் உயிரை எப்படி காப்பாற்றுவது என அந்த உயிரியல் பூங்காவில் உள்ள ஊழியர்கள் கவலைப்பட்டனர். அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக அதே உயிரியல் பூங்காவில் வளர்ந்துவரும் ஒரு பெண் நாய் கைகொடுக்க முன்வந்தது. அந்த மூன்று குட்டிகளையும் அந்த நாய் தனது சொந்தப் பிள்ளைகளாக பாவித்து, நேசத்துடனும், பாசத்துடனும் பாலூட்டும் நெகிழ்ச்சி காட்சியை மேற்படி உயிரியல் பூங்கா ஊழியர்கள் இணையதளம் வாயிலாக பதிவேற்றமும் செய்துள்ளனர்.