பாகிஸ்தானில் மழை-வெள்ளத்துக்கு 116 பேர் பலி - 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகளின்றி தவிப்பு
Aug 4 2015 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் மழை-வெள்ளத்துக்கு 116 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தினால், 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகளின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பியதால் வெளியேற்றப்பட்டுள்ள உபரி நீர், ஊருக்குள் பாய்ந்ததால் வீடுகள் மற்றும் விளை நிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனையடுத்து, நான்கரை லட்சம் ராணுவத்தினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் மற்றும் வீடுகள் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 116 பேர் பலியாகினர். மேலும் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். மேலும் பலர் வெள்ளப்பகுதிகளில் சிக்கியுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.