எகிப்தில் மரத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 25 தொழிலாளர்கள் பலி
Jul 29 2015 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எகிப்தில் மரத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அல்-ஒபாவுர் மாவட்டத்தில் மரத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 25 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்க போராடினர். கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியாதநிலையில், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.