பஹ்ரைனில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 2 போலீசார் உயிரிழப்பு - 5 பேர் காயம்
Jul 29 2015 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஹ்ரைனில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவுக்கு அருகே சிட்ரா என்ற கிராமத்தில், பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை குறிவைத்து தீவிரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில், 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மீட்பு படையினர், விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீசாரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.