சீன வணிக வளாகம் ஒன்றில், எஸ்கலேட்டரில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Jul 27 2015 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன வணிக வளாகம் ஒன்றில், எஸ்கலேட்டரில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய சீனாவின் ஜிங்ஷூ நகரில் உள்ள வணிக வளாகத்தில் 30 வயது பெண்மணி ஒருவர் தனது மகனுடன் எஸ்கலேட்டரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. எஸ்கலேட்டரின் தரைத்தள தட்டு திடீரென விலகியதால், அப்பெண்மணி இயந்திரத்தில் சிக்கினார். அப்போது, தான் இயந்திரத்தில் சிக்கிய போதும், தன்னுடைய குழந்தையை அங்கிருந்து அவர் பத்திரமாக விலக்கினார். உடனே அருகில் இருந்த வணிக வளாக ஊழியர்கள் அக்குழந்தையை தூக்கி கொண்டனர். இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண்மணியின் உடல் பின்னர் மீட்கப்பட்டது. எஸ்கலேட்டரில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.