அமெரிக்காவுடன் 60 ஆண்டுகளுக்குப் பின்னர், நல்லுறவு ஏற்பட்டுள்ள பின்னணியில் கியூபா புரட்சி தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது
Jul 27 2015 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவுடன் 60 ஆண்டுகளுக்குப் பின்னர், நல்லுறவு ஏற்பட்டுள்ள பின்னணியில் கியூபா புரட்சி தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
கியூபா நாட்டில் 1953-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ தனது தோழர் செ-குவராவுடன் இணைந்து கியூபா அரசுக்கு எதிராக புரட்சியை தொடங்கினார். இந்த போராட்டம் தோல்வியில் முடிவடைந்ததாலும், தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் புரட்சி ஏற்பட்டு 1959-ம் ஆண்டு ஆட்சியை காஸ்ட்ரோ கைப்பற்றினார். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வரை கியூபா அதிபராக அவர் பதவி வகித்தார். கியூபா புரட்சியை நினைவுகூரும் வகையில், 62-வது புரட்சித்தினம் Santiago நகரில் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய துணை அதிபர் Jose Ramon Machado Ventura அமெரிக்காவுடன் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை சுட்டிகாட்டி தொடர்ந்து கியூபா முன்னேறும் என குறிப்பிட்டார்.