பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால், ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் சேதம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Jul 27 2015 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால், ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் சேதமடைந்தன. ஏராளமான கிராமங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன.
பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த மழைக்கு பலியோனோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலத்த மழை காரணமாக பல இடங்களில் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பாலங்களும், சாலைகளும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை அந்நாட்டு பிரதமர் திரு. நவாஸ்ஷெரீப், பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் வெள்ள சேதம் அதிகரித்துள்ளது. 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.