இத்தாலியில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 பேர் பலி

Jul 25 2015 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 பேர் பலியாயினர்.

இத்தாலியின் தென் துறைமுக நகரமான Bari-யில், பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அந்த தொழிற்சாலையின் முன் நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரம்பிய வேன் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த பட்டாசு தொழிற்சாலைக்கும் பரவியது. தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால், தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் குண்டு வீச்சு விமானங்கள், அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00