கனடாவில் திருமண ஊர்வலத்தில், குதிரையில் அமர்ந்த மணமகனை, குதிரை தூக்கிப் பந்தாடிய காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது
Jul 25 2015 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் இருக்கும் சுர்ரே நகரை சேர்ந்த ஒரு சீக்கியர் குடும்பத்தில், திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. சீக்கிய சம்பிரதாயப்படி, ராஜா காலத்து காலணி, பைஜாமா, ஷர்வானி, தலைப்பாகை, உடைவாள் சகிதமாக மணமகன் குதிரை மீது ஏறினார். அவர் ஏறி அமர்ந்தவுடன் மிரட்சியடைந்த குதிரை கணைத்தபடி, முன்னங்கால்களை தூக்கி முரண்டு பிடித்தது. பயங்கரமாக கணைத்தபடி மீண்டும் முன்னங்காலை தூக்கி, சில தூரம் ஓடத்தொடங்கிய குதிரை, ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து தனது முதுகின் மீது அமர்ந்திருந்த மணமகனை தலைகுப்புற தரையில் உருட்டி விட்டது. தலைப்பாகை கழன்று, அந்த மணமகன் கீழே விழுந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அந்த குதிரைக்கு யாரோ போதைப்பொருள் தருவது போன்ற பதிவு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.