மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 5 மாகாணங்களுக்கு 18.7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு - பிரிட்டன் எண்ணெய் நிறுவனம் ஒப்புதல்
Jul 3 2015 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 5 மாகாணங்களுக்கு 18.7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு வழங்க பிரிட்டன் எண்ணெய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் எண்ணை துரப்பன பணியில், கடந்த 2010-ம் ஆண்டு, பிரிட்டனைச் சேர்ந்த BP என்னும் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. அப்போது நேரிட்ட விபத்தில், 11 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு, பல லட்சக்கணக்கான பேரல் எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் ப்ளோரிடா உள்ளிட்ட 5 மாகாணங்களின் கடல்பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. சுற்றுச்சுழலுக்கு மாசுகட்டுப்பாட்டை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, நஷ்டஈடு வழங்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18.7 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு வழங்குவதாக, பிரிட்டன் எண்ணெய் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.