பாகிஸ்தானில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சிறப்பு ரெயில் கால்வாய்க்குள் கவிழ்ந்தது : கமாண்டர் உள்பட 12 ராணுவ வீரர்கள் பலி
Jul 3 2015 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சிறப்பு ரெயில் கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இதில் கமாண்டர் உள்பட 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ராத் நகரில் உள்ள புன்னோ ஆகல் என்ற இடத்தில் இருந்து ஹரியான் என்ற இடத்திற்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். இந்த ரயில் கால்வாய் ஒன்றை கடந்துசென்றபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதனால், ரயிலின் 4 பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்து கவிழ்ந்தன. அதிலிருந்த 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 80 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.