சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழப்பு : சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தகவல்
Jul 3 2015 7:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சின்ஷியாங் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சின்ஷியாங் மாகாணத்தில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் குமா கவுன்ட்டி அருகில் உள்ள ஹோடன் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். நிலநடுக்கம் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்க சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக விளங்கும் குமா கவுண்டியில், இந்த வாரத்தில் ஏற்பட்ட 2-வது நிலநடுக்கம் இதுவாகும். இந்த வருடத்தில் மட்டும் இப்பகுதியில் 8 முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.