பாகிஸ்தானில் ராணுவப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் உயிரிழப்பு
Jun 30 2015 8:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் ராணுவப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள கான் காலனி மற்றும் ரச்னா நகர் பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, உள்ளுர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் ராணுவப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்ட்டிருந்தபோது, தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் மீது ராணுவப்படையினர் அதிரடி தாக்குதல் தொடுத்தனர். இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிப்பொருட்கள், பயங்கர ஆயுதங்களை ராணுவப்படையினர் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து, லாகூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.