உலக அதிசியங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரில் 30 சதவீதம் அளவிற்கு செங்கற்கள் சிதைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்
Jun 30 2015 8:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அதிசியங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரில் 30 சதவீதம் அளவிற்கு செங்கற்கள் சிதைந்து விட்டதாக, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக பராம்பரிய சின்னமான சீனப்பெருஞ்சுவர் மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது. ஆயிரத்து 962 கிலோ மீட்டர் நீளமுள்ள சுவரானது, இயற்கை சீற்றங்களாலும், பல்வேறு வானிலை காரணங்களாலும் சுவர் சிதைந்துவிட்டதாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உலக மக்களை ஈர்க்கும் இந்த சுவரிலிருந்து, 30 சதவீதம் செங்கற்கள் சிதைந்து விட்டதாகவும், ஏராளமான கற்கள் திருடு போயுள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.