2030ஆம் ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அழிக்க முடிவு : மோதி அழிக்கும் விண்கலத்தை உருவாக்க முன்மொழிவு வழங்கியது நாசா
Sep 21 2023 7:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவான சர்வதேச விண்வெளி நிலையத்தை தாக்கி அழிப்பதற்கான விண்கலத்தை உருவாக்க நாசா முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நிதிப் பங்கீட்டின் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம், 1998ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு, விண்வெளியில் கட்டமைக்கப்பட்டது. 24 ஆண்டுகளாக அந்த விண்வெளி நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், 2030ஆம் ஆண்டுடன் அதற்கு ஓய்வு கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன் படி, புவியின் கீழ் சுற்று வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தை, மேல் நோக்கி உந்தித் தள்ளும் பொருட்டு, அதன் மீது மோத விடுவதற்காக, விண்கலத்தை தயாரிக்க நாசா முடிவு செய்துள்ளது. இதற்கான முன் மொழிவையும் நாசா வெளியிட்டுள்ளது.