பிரிவினைவாதி சுக்துல் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திருப்பம் : கொலைக்கு பொறுப்பேற்ற லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான குழுவினர்
Sep 21 2023 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் பிரிவினைவாதி சுக்துல் சிங் என்ற சுக்கா டுனெகே கொல்லப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
பஞ்சாப் பாடகரான சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவரது குழுவை சேர்ந்தவர்கள் சுக்துல் சிங் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கபடி விளையாட்டு வீரரான சந்தீப் நங்கல் அம்பியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுக்துல் சிங் முக்கிய குற்றவாளியாவார். இந்நிலையில் அம்பியன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் பிஷ்னோய் குழுவை சேர்ந்தவர்கள் கனடாவில் உள்ள வின்னிபெக் நகரில் சுக்துல் சிங்கை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.