கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை : சுக்தூல் சிங் என்பவர் கேங் வாரில் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்
Sep 21 2023 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுக்துல் சிங் என்ற சுக்கா டுனெகே என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பிரிவினைவாத ஆதரவு இயக்க தலைவரான நிஜ்ஜாரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற நிலையில், தற்போது போட்டி பிரிவினைவாதிகளால் டுனெகே சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்பான ராவின் பங்களிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் முக்கிய நபராக உள்ள அர்ஷ்தீப் சிங்கிற்கு மிகவும் நெருக்கமான டுனெகேவும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது இந்தியா- கனடா இடையேயான உறவை மேலும் மோசமாக்கலாம் என கூறப்படுகிறது.