இங்கிலாந்தில் வயதான இந்து பக்தரிடம் எல்லை மீறிய போலீஸ் அதிகாரி : வீடியோ வைரலானதை அடுத்து வலுக்கும் கண்டனம்
Sep 20 2023 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தின் போது வயதான இந்து பக்தரிடம், போலீஸ் அதிகாரி ஒருவர் அநாகரிமாக நடந்து கொண்ட அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. இங்கிலாந்தின் சமூகவலைதளமான Insight UK, இந்த வீடியோவைப் பகிர்ந்து, ஆடம் அகம்மது என்ற அதிகாரியால் வயதான இந்து பக்தர் அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சாலையில் நடந்து செல்லும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வயதான இந்து பக்தரை தொடர்ந்து சென்று போலீஸ் அதிகாரி ஒருவர் தவறாக நடத்துவது மட்டுமின்றி, அவரை தொடாதே என்று கூறும் மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரிடம்,மோதலில் ஈடுபடுவது போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.