அமெரிக்காவில் இடுப்பளவு வெள்ளநீரில் காரில் தத்தளித்த நபர் : வெள்ளநீரில் சிக்கி தவித்த நபரை மீட்ட போலீஸ்
Sep 20 2023 5:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் வெள்ளநீரில் காரில் சிக்கி தவித்த நபரை போலீசார் பத்திரமாக மீட்டனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அட்லாண்டாவில் இடுப்பளவிற்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் காரில் ஒருவர் சிக்கி கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரை பத்திரமாக மீட்டனர்.