தெற்கு ஹைதியில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : 4 பேர் பலி, 36 பேர் படுகாயம்
Jun 7 2023 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு ஹைதியில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்மேற்கு கடற்கரை நகரமான ஜெர்மி அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, கனமழையால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.